திருப்பூர்: ஊராட்சி தலைவர் ஓட ஓட விரட்டி கொலை
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி மன்றத்தின் தலைவர் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவர் திருப்பூர் அருகே உள்ள இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தார்.
ரத்தினசாமி ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி அரிவாளால் பயங்கரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பின்னர்அந்தக் கொலைக் கும்பல் அவருடைய உடலை ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டுத் தப்பியோடி விட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து திருப்பூர் பகுதியில் நாளை கடையடைப்பு நடத்த அனைத்துக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications