நாளை யாழ்ப்பாணம் செல்கிறார் ரணில்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் கோட்டையான யாழ்ப்பாணம் பகுதிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாளை(வியாழக்கிழமை) பயணம் செய்கிறார்.
இதையடுத்து தாற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்துவிடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவத்தினரும் மேற்கொண்டனர்.
இந்த இருமாத காலப் போர்நிறுத்தம் முடிவதற்கு முன்பே கடந்த பிப்ரவரி 22ம் தேதி நிரந்தரப் போர்நிறுத்தஒப்பந்தத்தில் இலங்கை பிரதமரும் விடுதலைப்புலிகளும் கையெழுத்திட்டனர். மறுநாள் நள்ளிரவிலிருந்தே இந்தநிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்துவிட்டது.
இதையொட்டி விடுதலைப்புலிகளின் பகுதியான வவுனியா பகுதிக்கு ரணில் சென்று வந்தார்.
இதையடுத்து மற்றொரு முக்கியத் திருப்பமாக விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கும்யாழ்ப்பாணத்திற்கும் ரணில் நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரணிலின் இந்த யாழ்ப்பாண விஜயம் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் மேலும் ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் யாழ்ப்பணத்திற்கு இலங்கைப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை என்பதும்இங்கு மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.












Click it and Unblock the Notifications