வள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம்: தமாகா பாராட்டு
சென்னை:
வேலூரில் திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ள அரசின் திட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்எம்.எல்.ஏ. ஞானசேகரன் பாராட்டு தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில்,
வேலூரில் திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில்தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இதை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
அதேபோல, கடந்த திமுக ஆட்சியின்போது, வேலூல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று உறுதிமொழிதரப்பட்டது. அதையும் இந்த ஆட்சியே நிறைவேற்ற வேண்டும்.
மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுவருத்தம் தருகிறது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாடுகுறித்து அறிய விரும்புகிறேன்.
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க போலீஸார்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார் ஞானசேகரன்.












Click it and Unblock the Notifications