மாணவர்கள் போராட்டத்தில் தலையிட முடியாது: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சனையில் அரசு தலையிடாது என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றுகோரி கடந்த 4 நாட்களாக சட்ட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் சுமார் 15 மாணவர்கள் மயங்கிச் சரிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள்தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதாபேசுகையில்,
சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சனை தொடர்பான ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை இப்பிரச்சனையில் அரசு தலையிடாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications