பூமி பூஜை நடந்தால் காஞ்சி ரயில் நிலையம் தகர்க்கப்படும்: அல் உம்மா மிரட்டல்
காஞ்சிபுரம்:
அயோத்தியில் 15ம் தேதி சர்ச்சைக்குரிய இடத்தில் பூமி பூஜை நடந்தால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தைவெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அல் உம்மா தீவிரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
போஸ்ட் கார்ட் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அல் உம்மா அமைப்பின் பெயரால் இந்தமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடிதத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ரயில் நிலைய மாஸ்டர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் ரயில் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அயோத்திப் பிரச்சினையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மத்தியஸ்தம் செய்ததால்அவருக்கும் ஏற்கனவே மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காஞ்சி மடத்திற்கும் பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் நிலையத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் முழுவதிலும் முக்கியக் கோவில்கள், சங்கர மடம் ஆகியவற்றிற்கு கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications