புதுவையில் பள்ளிக் கட்டடத்தை அதிரடியாகத் திறந்த மாணவிகள்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் புதிய பள்ளிக் கட்டடம் ஒன்றை பெற்றோர்களுடன் சேர்ந்து மாணவிகள் அதிரடியாகத் திறந்தனர்.
பாண்டிச்சேரி லாஸ்பேட் பகுதியில் உள்ளது அரசு வெள்ளாளர் பெண்கள் உயர் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளிதற்போது குடிசையில் இயங்கி வருகிறது.
இதையடுத்து இந்தப் பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா கடந்த 11ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தான் வெளியூரில் இருக்கும்போது திறப்பு விழா நிகழ்ச்சியைநடத்துவதற்கு அந்தத் தொகுதி எம்.எல்.ஏவான ஷாஜகான் பாரூக் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ஆளுநர், முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த அந்தப் பள்ளியின் திறப்பு விழா ரத்துசெய்யப்பட்டது.
இந்த நிலையில் புதிய கட்டிடத்தை திறந்து அதில் மாணவிகளை அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி மாணவிகள்தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் அவர் இதுகுறித்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அனைத்து மாணவிகளும் பள்ளிக்குச் செல்லும் முக்கிய சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்இறங்கினர். மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய கட்டிடத்தைத் திறந்து விடுமாறு தலைமை ஆசிரியருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பிறகு அந்தப் பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.
சந்தோஷமடைந்த மாணவிகளும் போராட்டத்தைக் கைவிட்டு, புதிய கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளுக்குச்சென்றனர்.












Click it and Unblock the Notifications