பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர ஜெ. முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த திமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறையில் ஏராளமான ஊழல்கள் நடந்திருப்பதால், அத்துறையின்அமைச்சராக இருந்த பொன்முடி மீது பல வழக்குகளைத் தொடரவிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(வெள்ளிக்கிழமை) கூறினார்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா இன்று பேசும்போது, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதிஆட்சிக் காலத்தில் பொன்முடியிடம் போக்குவரத்துத்துறை சிக்கி சீரழிந்து விட்டது என்று கூறினார்.

இதைக் கண்டித்து சபையின் எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள்வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சபைக் கூட்டம் முடிந்தபின் வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:

கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் பொன்முடி ஏராளமான ஊழல்களைச் செய்துள்ளார். ஆனால் நான் சபையில்பேசும்போது ஒரு சிலவற்றைத்தான் சுட்டிக் காட்டினேன்.

எல்லாவற்றையும் சபையிலேயே நான் சுட்டிக் காட்டியிருக்க முடியும். ஆனால் பொன்முடி அவற்றையெல்லாம்நிச்சயம் மறுக்கத்தான் செய்வார்.

பொன்முடியை நீதிமன்றத்தில் நிறுத்தியே ஆகவேண்டும். அங்கே அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் என்றார் ஜெயலலிதா.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பொன்முடி, என் மீது ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிரூபித்தால்நான் என்னுடைய எம்.எல்.ஏ. பதவியையே ராஜினாமா செய்யத் தயார் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+