""வாசமில்லா மலர் இது"": திமுகவின் கிண்டல்
சென்னை:
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை "இனிப்பில்லா கரும்பு" போலவும் "வாசமில்லாமலர்" போலவும் இருந்தது என்று சபையின் திமுக துணைத் தலைவர் துரைமுருகன் இன்று (வெள்ளிக்கிழமை)கூறினார்.
ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது இதுகுறித்து துரைமுருகன் பேசியதாவது:
ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்திருந்தது.
ஆனால் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இவ்வளவு திட்டங்களையும் செயல்படுத்தமுடியுமா என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது.
கடந்த ஆண்டும் அதிமுக ஆட்சிக் காலத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரின்போதும் இதேபோன்றஆளுநர் உரையில் நிறையத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் அவை அனைத்துமே அந்தக் காகிதத்தில் மட்டுமே இருந்தனவே தவிர, எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
சமீபத்தில் ரூ.4,000 கோடிக்கு புதிய வரிகளையும் கட்டண-விலைவாசி உயர்வுகளையும் தமிழக மக்கள் மீதுதிணித்திருப்பதுதான் அதிமுக அரசின் ஒரே "சாதனை"யாகும் என்று துரைமுருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications