அயோத்தி பூஜை: குஜராத்தில் மீண்டும் கலவரம்- ஊரடங்கு
அகமதாபாத்:
அயோத்தியில் பூஜை நடத்தவும், தூண்களை தானம் வழங்கவும் மத்திய அரசு அனுமதித்தைக் கண்டித்துகுஜராத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.
ஷாபூர், காரன்ச், காலுபூர் ஆகிய நகர்களில் கலவரம் வெடித்தது. கல்வீச்சும், கத்திக் குத்துகளும் நடந்தன.
இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தான் குஜராத் முழுவதும் கலவரம் வெடித்து 650 பேர் எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஹைதராபாத்தில் பதற்றம்:
அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கொடுத்ததைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திவிட்டுத்திரும்பிய முஸ்லீம்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சார்மினார் அருகே நடந்த இந்த ஆர்பாட்டத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த ஆர்பாட்டக்காரர்களைமுன்னேறிச் செல்லவிடாமல் முஸ்லீம் பெரியவர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மனித சங்கிலி அமைத்துஇவர்களைத் தடுத்தனர்.
ஆனால், அவர்களையும் மீறி ஆர்பாட்டக்காரர்கள் ஷாலிபண்டா பகுதிக்குள் நுழைந்தனர். இதையடுத்து போலீசார்விரைந்து வந்து தடியடி நடத்தினர்.
தகவல் அறிந்து தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கியநண்பருமான லால்ஜான் பாஷா அங்கு விரைந்து வந்தார். கூட்டத்தினரை சமாதானப்படுத்திய அவர் நாம் ஒருமுன்மாதிரியாக செயல்பட்டு அமைதி காப்போம் என்றார்.
முன்னதாக அயோத்தி பூஜையையொட்டி ஹைதராபாத்தில் முழுப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லீம்கள் பெருமளவில் பள்ளிவாசல்களில் கூடுவர் என்பதால் நாடுமுழுவதும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications