பரமஹம்ஸ் பிடிவாதம்: சிறப்பு விமானத்தில் அயோத்தி வரும் அதிகாரி
அயோத்தி:
சிலையை அயோத்தி நில பராமரிப்பு அதிகாரியிடம் வழங்கத் தயாராக உள்ளதாகத் கூறிய ராமச்சந்திர பரமஹமஸ்மறுபடியும் தனது நிலைலை மாற்றிக் கொண்டுள்ளார்.
அவரிடம் சிலையைத் தர மாட்டேன், மத்திய கேபினட் செக்ரடரி அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம் தான் தருவேன்என்று கூறிவிட்டார்.
இதனால், மத்திய கேபினட் செக்ரடேரியேட்டில் உள்ள அயோத்தி விவகாரத்தை கவனிக்கும் பிரிவின் அதிகாரிசத்ருகன் சிங் சிறப்பு விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
முதலில் இந்த சிலையை அயோத்தியில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தைக் கண்காணித்து வரும் அதிகாரியும்பைசாபாத் மாவட்ட ஆட்சியருமான ஏ.கே. குப்தாவிடம் வழங்கத் தயாராக உள்ளதாக பரமஹம்ஸ் கூறியிருந்தார்.
ஆனால், திடீரென குப்தாவிடம் தர மாட்டேன், அவர் அயோத்தியையே இடத்தை ஜெயில் மாதிரி மாற்றிவிட்டார்.அவரை நம்ப மாட்டேன். டெல்லியில் உள்ள சத்ருகன் சிங்கிடம் தான் தருவேன். அவர் உடனே இங்கு வரவேண்டும் என்றார்.
பரமஹம்சின் பல்டி குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் சத்ருகன்சிங்கை அயோத்திக்கு அனுப்ப வாஜ்பாய் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அயோத்தி விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications