பரமஹம்சிடம் கெஞ்சிய பிரதமர், அத்வானி, பெர்னாண்டஸ்
டெல்லி:
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் நுழைந்து பூஜை ஏதாவது நடத்தினால் மத்திய அரசே கவிந்து விடும் எனபிரதமர் வாஜ்பாய் கூறியதை அடுத்துத் தான் அந்தத் திட்டத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளை கைவிட்டுள்ளது.
நீதிமன்றத் தடையை மீறி பூஜை நடத்துவேன், தடுத்தால் விஷம் குடிப்பேன் என மிரட்டிய ராமஜென்ம பூமிஅறக்கட்டளைத் தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்சை சமாதானப்படுத்த முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் பலமுறை தொலைபேசியில் பேசினார்.
ஆனால், அவருக்கு கடுமையாக பதிலளித்த தாஸ் பூஜை நடத்தியே ஆவன்ே என்றார்.
இதையடுத்து அத்வானியைக் கொண்டு அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. நேற்றிரவு முழுவதும்டெல்லியில் இருந்த அத்வானி அயோத்தியில் இருந்த பரமஹம்சிடம் பலமுறை தொலைபேசியில் பேசினார்.நீதிமன்றத்தில் பூஜைக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுத்ததையும் தொடர்ந்து எப்படியும் போராடிபூஜைக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறினார்.
ஆனால், அதே நேரத்தில் இப்போது நீதிமன்றத் தடையை மீறி பூஜை நடத்தினால் எதிர்காலத்தில் கடும்பிரச்சனைகளை அரசு சந்திக்கும் என்றார். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட பரமஹம்ஸ் பூஜை நடத்துவேன்,வேண்டுமானால் என்னைக் கைது செய்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சரை மிரட்டினார்.
இதையடுத்து பிரம்மாஸ்திரம் பயன்படுத்தப்பட்டது. பிரதமர் வாஜ்பாயே நேரடியாக பரமஹம்சிடம் நள்ளிரவில்பேசினார். பிரச்சனைக்குரிய இடத்தில் பூஜைக்கு அனுமதி தந்தால் தனது ஆட்சி கவிழும் என்பதை விளக்கினார்.தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்துவிடும். இதனால், வி.எச்.பியும்,ராமஜென்மபூமி அறக்கட்டளையும் மேலும் பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்கம்தந்தார்.
இதைத் தொடர்ந்து தற்கொலை மிரட்டலை விட்டுவிட்டு பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாத தூரத்தில் உள்ள ஒருஇடத்தில் தூணை தானம் செய்யும் நிகழ்ச்சியை மட்டும் நடத்துவதாக பரமஹம்ஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications