சில நிமிடங்களில் ஊர்வலம் தொடங்குகிறது

Subscribe to Oneindia Tamil

அயோத்தி:

அயோத்தியில் பிரச்சனைக்குறிய இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ராம்கோட்டில் தூண் தானமும்சிறப்புப் பூஜையும் நடக்கும் என்று தெரிகிறது.

கோவில் கட்டுவதற்காக தூண்கள் செய்யும் பணி நடந்து வரும் கர்சேவக்புரத்தில் இருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கல் தலைமையில் 2.15 மணிக்கு கரசேவகர்கள் ராம்கோட்டுக்கு ஊர்வலமாகப்புறப்படுகின்றனர்.

ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் ராமச்சந்திர பரமஹம்ஸ் சிலை தானம் நிகழ்ச்சியை நடத்துவார். இதன்பின்னர் பூஜையும் நடத்தப் போவதாக இப்போது அறிவித்துள்ளார்.

பிடிவாதம் பிடித்த அவரிடம் பிரதமர், அத்வானி, பெர்னாண்டஸ் ஆகியார் பேசித் தான் பிரச்சனைக்குரியஇடத்திலிருந்து தூரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் அவருடன் காலையில் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த தூண் தான நிகழச்சியையொடி டெல்லியிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பைத்தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடமிருந்து உத்தரவு பறந்துள்ளது.

அதிக அளவிலான உளவுப் பிரிவினரும் நாடு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+