சிலை தானத்தை வேறிடத்தில் நடத்துவேன்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் திடீர் பல்டி
அயோத்தி:
அரசின் கைவசமுள்ள நிலத்திற்கு வெளியில் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ராமஜென்ம பூமிஅறக்கட்டளையின் தலைவர் மகந்த் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி தூண் தானத்தை பிரச்சனைக்குரிய இடத்தின் அருகே நடத்திக் காட்டுவேன் என்றும்தூணை நான் கொண்டு செல்லும்போது என்னைப் போலீசார் தடுத்தால் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் பரமஹம்ஸ் நேற்று கூறியிருந்தார்.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோர் அவருடன் தொடர்ந்து தொலைபேசியில் அவருடன் பலமுறை பேசினர்.
இதையடுத்து, தன்னுடைய நிலையிலிருந்து பரமஹம்ஸ் இறங்கி வந்துள்ளார்.
அரசின் கைவசமுள்ள நிலத்திற்குள் செல்லாமலேயே தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று இன்றுபரமஹம்ஸ் அறிவித்துள்ளார். அந்த நிலப்பகுதி அரசிடமிருந்து இந்துக்களின் கைக்கு வரும்வரை அங்கே நுழையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சிக்காக ராம்கோட் மொஹல்லாவுக்கு அருகே ஒரு இடத்தைத்தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரமஹம்ஸ் கூறினார்.
அரசு கைவசமுள்ள நிலத்திற்கு வெளியே சாலையிலோ அல்லது வேறு எங்காவதோ வைத்து தூணை வழங்கினால்மட்டுமே நாங்கள் அதைப் பெற்றுக் கொள்வோம். அதற்கு ரசீது கேட்டாலும் கொடுத்து விடுவோம் என்றுபைசாபாத் டிவிஷனல் கமிஷனர் ஏ.கே. குப்தா நேற்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications