தனி நீதிமன்றங்களைக் குறைத்து ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழகமுதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளைப் போடுவதற்காகவே தனி நீதிமன்றங்கள்ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் படிப்படியாக 35 வழக்குகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழு வழக்குகள்மட்டுமே தனி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த ஏழு வழக்குகளையும் விசாரிப்பதற்கு ஒரு நீதிமன்றம் மட்டுமே போதுமானது என்று கூறிய ஜெயலலிதா, மற்றநீதிமன்றங்களுக்காக தேவையில்லாமல் செலவு செய்யப்படுவதை அரசு விரும்பவில்லை என்று கூறினார்.

இதனால் தனி நீதிமன்றங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதாகூறினார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, ஸ்பிக் ஊழல் வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் இன்னும்தனி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+