ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் வாசன்
சென்னை:
ராஜ்யசபா தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து போட்டியிடும் 6 வேட்பாளர்களுமே போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்படுவத நிச்சயமாகிவிட்டது.
ராஜ்யசபா தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுவதையடுத்து, அதிமுக சார்பில் முன்னாள் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.தங்கத் தமிழ்செல்வன், வழக்கறிஞர் ஜோதி, எஸ்.பி.எம். சையது கான் மற்றும் சீ. பெருமாள் ஆகிய நான்கு பேரும்,திமுக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரமும், தமாகா சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும்வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த ஆறு பேரைத் தவிர, மூன்று சுயேச்சைகளும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்த மூன்று சுயேச்சை வேட்பாளர்களும்டெபாசிட் செலுத்தாததோடு, அவர்களை முன் மொழிவதற்கு எந்த எம்.எல்.ஏவும் வராத காரணத்தால்அவர்களுடைய மனுக்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து மீதமுள்ள ஆறு வேட்பாளர்களுமே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
இருந்தாலும் வரும் 18ம் தேதிதான் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால், அன்றையதினமே முறைப்படியான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று நிருபர்களிடம் தேர்தல் அதிகாரி ராஜாராமன்கூறினார்.












Click it and Unblock the Notifications