அமெரிக்க அமைச்சரைச் சந்திக்க சந்திரிகா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சரை சந்திக்க அதிபர் சந்திரிகா மறுத்துவிட்டார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் அரசுக்கும் இடையே நிரந்தர போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு சந்திரிகா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். ஆனால், இந்தஒப்பந்தத்தை அமெரிக்கா ஆதரித்துள்ளது.

இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிரிஸ்டினா ரோக்கா தெற்காசியப் பயணமாகஇலங்கை வந்துள்ளார்.

நேற்று இலங்கையில் தமிழர் பகுதியில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை பலாலியில் சந்திதித்துப்பேசினார் கிரிஸ்டினா. அப்போது புலிகளுடன் அமைதி முயற்சிக்கு அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளைவெகுவாகப் பாராட்டினார்.

இந்தத் தகவல் சந்திரிகாவை எட்டியது. இதையடுத்து கிரிஸ்டினாவுடன் நடத்த இருந்த தனது சந்திப்பை சந்திரிகாஉடனடியாக ரத்து செய்தார். இந்தத் தகவல் அமெரிக்கத் தூதரகம் மூலமாக கிரிஸ்டினாவுக்கு எட்டியது. பெரும்அதிர்ச்சியடைந்த அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார். சந்திரிகாவின் இந்தச் செயல் குறித்து விளக்கினார். சந்திரிகாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குபெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+