பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் ரெய்ட் தொடர்கிறது
விழுப்புரம்:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியில் விழுப்புரம் வீட்டில் நேற்றிரவு தாங்கள் வைத்த சீலை போலீசாரே இன்றுகாலை உடைத்தனர். அந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துத்துறைகளை தனியார்மயமாக்குவதில் ஜெயலலிதாவுக்கும் பொன்முடிக்கும் இடையேசட்டமன்றத்தில் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் பொன்முடி மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கைவரும். அவர் அதை நீதிமன்றத்தில் சந்திந்துக் கொள்ளட்டும் என்று ஜெயலலிதா கூறினார்.
அவர் அவ்வாறு கூறிய 3வது மணி நேரத்தில் பொன்முடியின் சென்னை வீட்டில் வந்திறங்கி சோதனை நடத்தியதுபோலீஸ். இரவு முழுவதும் சோதனை நடந்தது.
ஆனால், அவரது விழுப்புரம் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அங்கு சோதனைக்குச் சென்ற போலீசார் அதை சீல்வைத்துவிட்டுத் திரும்பினர்.
விழுப்புரம் விரைந்த பொன்முடி:
இதையடுத்து இன்று காலை பொன்முடி விழுப்புரம் விரைந்தார். அவரது முன்னிலையில் போலீஸ் படையினர் சீலைஉடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். காலை முதல் ரெய்ட் நடந்து கொண்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறைஎஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி தலைமையில் 10 போலீசார் இந்தச் சோதனையை நடத்திக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து திமுக எம்.பி. ஆதிசங்கர், எம்.எல்.ஏ. புகழேந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர்பொன்முடியின் வீட்டின் முன் குவிந்துள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான போலீசாரும்குவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடியின் அண்ணன், தம்பி, உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் வீடுகள், இவர்களதுகடைகள் ஆகிய இடங்களிலும் நேற்றிரவில் சோதனைகள் நடந்தன.
கடலூரில் உள்ள பொன்முடிக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோ-ரூமிலும் ரெய்ட் நடந்தது.
பிற திமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்தாலும் பொன்முடியின் வீடுகளிலும், உறவினர்களினவீடுகளிலும் தான் தீவிர ரெய்ட் நடந்து வருகிறது.
நகைகள் சிக்கின:
பொன்முடியின் வீட்டிலிருந்து பெருமளவிலான நகைகளும், பணமும் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications