பாகிஸ்தானில் சர்ச் மீது தாக்குதல்: புஷ் கண்டனம்
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு சர்ச் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்ட சம்பவத்திற்குஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இன்டர் நேஷனல் சர்ச் ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த ஒரு மர்ம நபர் கிரினேட் குண்டுகளை சராமாரியாக வீசித் தாக்கினான்.
இந்தச் சம்பவத்தில் அமெரிக்க தூதரின் மனைவி, மகள் உள்பட 5 பேர் இறந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக புஷ் கூறியுள்ளார்.
இதற்குக் காரணமான தீவிரவாதிகளை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்புஷ் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் சரி அல்லது உலகில் எங்கு வேண்டுமானாலும் சரி. தீவிரவாதம் வெற்றி பெறுவதை நாங்கள்அனுமதிக்க மாட்டோம் என்றும் புஷ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சர்ச் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மனித வெடிகுண்டுதான் காரணமா என்ற கோணத்திலும்பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications