எரிகிறது குஜராத்: அகமதாபாத்தில் துப்பாக்கிச் சூடு
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும் வெடித்த கலவரத்தையடுத்து, அங்கு வன்முறைதலைவிரித்து ஆடுகிறது.
கோத்ராவில் சபர்மதி ரயிலோடு 58 ராம கர சேவகர்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும்வன்முறை வெடித்தது. இதில் சுமார் 650 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் கடந்த வாரம் நிலைமை ஓரளவு சீரடைந்து, அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவும் முழுமையாகத்தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் குஜராத்தில் கலவரம் வெடித்தது. குறிப்பாகஅகமதாபாத்திலும் பரோடாவிலும் வன்முறை தாண்டவமாடியது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வன்முறைக் கும்பலைக் கலைப்பதற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பரோடா மாவட்டத்தில் இரண்டு பேர் வன்முறைக் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சமீபத்திய கலவரங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
பல இடங்களில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்குத் தீவைக்கும் சம்பவம், கல்லெறிச் சம்பவம்போன்றவை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.












Click it and Unblock the Notifications