"கடவுளே ரங்கநாதா... இவர்களைக் காப்பாத்துப்பா"
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பசுக்கள் ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து 2அமைச்சர்கள் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. பல ஆண்டுகளாக இந்தக் கோவிலுக்கு பக்தர்கள்பலர் பசு மாடுகளைக் காணிக்கையாக அளித்து வருகின்றனர்.
காணிக்கையாக வந்த மாடுகளை கோவில் நிர்வாகம் ஏலத்தில் விட்டுவிடும். இந்த ஏலத் தொகை மூலம் வரும்பணத்தில் கோவில் நலப்பணிகளை செய்வது வழக்கம்.
இதே போல் சமீபத்தில், இந்த கோவிலுக்குச் சொந்தமான 97 பசு மாடுகளை ராகவன் என்பவருக்கு கோவில்நிர்வாகம் ஏலத்தில் கொடுத்தது.
இந்த ஏலத்தில்தான் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு புகார்கள்வந்தன.
இதையடுத்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, செய்தித் தொடர்பு அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விரைந்தனர்.
கோவில் நிர்வாகக்குழுவிடம் இரு அமைச்சர்களும் விசாரனை செய்தனர். ஊழல் நடந்திருந்தால், ஊழல்செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
கோவில்களிலும் ஊழல் செய்பவர்களை அந்தக் கடவுள் ரங்கநாதர்தான் காப்பாத்தணும் !!












Click it and Unblock the Notifications