அயோத்தி: வி.எச்.பி. தலைவர் திடீர் உண்ணாவிரதம்
அயோத்தி:
அயோத்திக்கு வரும் கர சேவகர்கள் தடுத்து நிறுத்தப்படுவதைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்தலைவர் அசோக் சிங்கால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்று சாகும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அயோத்தியில் ஒரு வழியாக தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி அமைதியாக முடிவடைந்துவிட்ட போதிலும் அங்குஇன்னும் கர சேவகர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அசோக் சிங்கால் நேற்று பகல் 12.45 மணிக்கு திடீர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புனித நகரமான அயோத்தியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் இருந்து வரும் அனைத்துத் தடைகளையும் நீக்கவேண்டும். பஸ், ரயில் போக்குவரத்தையும் உடனடியாகத் தொடங்க வேண்டும். மேலும் ராணுவத்தைமுழுவதுமாக வாபஸ் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த சாகும் வரையிலானஉண்ணாவிரதத்தை சிங்கால் தொடங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள வி.எச்.பி. தொண்டர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்என்றும் சிங்கால் கோரிக்கை விடுத்துள்ளார்.
"நிலத்தை நாங்களே எடுத்துக் கொள்வோம்"
இதற்கிடையே அயோத்தியில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை நாங்களாகவே எடுத்துக் கொள்வோம் என்றுராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டிலேயே ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தொடங்கி விடுவோம் என்றும் கூறியபரமஹம்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் பணி முடிவடையும் என்றார்.












Click it and Unblock the Notifications