கருணாநிதி அலுவலகம் மீது தாக்குதல்: திமுக பிரமுகரிடம் போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாகசேப்பாக்கம் திமுக செயலாளரான ஏ.கே. ஜெகதீசனைப் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீசார் பிடித்துச் சென்றுவிசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை-சேப்பாக்கத்தில் கடந்த 8ம் தேதிதான் தன்னுடைய எம்.எல்.ஏ. அலுவலகத்தை கருணாநிதி திறந்துவைத்தார். ஆனால் மறுநாளே அந்த அலுவலகத்தை யாரோ கல் வீசிச் சேதப்படுத்தினர்.

இது தொடர்பாக கருணாநிதி கடந்த 10ம் தேதி காலை அந்த அலுவலகத்தில் வைத்தே திடீர் உண்ணாவிரதத்தைமேற்கொண்டார். இதனால் சென்னை மாநகரமே மிகுந்த பரபரப்புக்குள்ளானது.

இந்தத் தாக்குதலை நடத்திய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்றுசென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் வடசென்னை போலீஸ் துணை கமிஷனர் சைலேந்திர பாபுஆகியோர் உறுதியளித்ததன் பேரில், இரண்டு மணி நேரத்தில் தன்னுடைய உண்ணாவிரதத்தை கருணாநிதி வாபஸ்பெற்றுக் கொண்டார்.

இதற்கிடையே இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரித்து வந்த போலீசார், இன்று ஜெகதீசனைஅழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இன்று காலை சென்னை மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய ஜெகதீசனை, திருவல்லிக்கேணிபோலீசார் வழியிலேயே மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ஜெகதீசன், உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு என்னைப் பிடித்துபோலீசார் விசாரிக்கின்றனர். தமிழக அரசின் பேச்சைக் கேட்டு அவர்கள் டான்ஸ் ஆட வேண்டிய சூழ்நிலையில்உள்ளனர் என்றார்.

ஜெகதீசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+