கூடலூரிலும் விரைவில் தாவரவியல் பூங்கா
Subscribe to Oneindia Tamil
கூடலூர்:
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போலவே கூடலூரிலும் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்காஅமைக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் கூறியுள்ளார்.
ஊட்டி சென்றிருந்த மில்லர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூடலூர் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போல கூடலூரிலும்ஒரு பூங்கா அமைக்கப்படும்.
இதற்காக கூடலூர் தேவாலா பகுதியில் உள்ள தோட்டகலைத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலப்பரப்புபயன்படுத்திக் கொள்ளப்படும்.
முதுமலை விலங்குகள் சரணாலயத்தில் உள்ள இளைஞர் விடுதி கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதைமீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மில்லர் கூறினார்.
கூடலூர் தொகுதி எம்.எல்.ஏதான் அமைச்சர் மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications