பொடோ மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல்
டெல்லி:
மக்களவையில் பொடோ சட்டம் நேற்று (திங்கள்கிழமை) வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, நாளை அதுராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது.
நேற்று பொடோ சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதை எதிர்த்த காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.
அதன் பின்னர் பொடோ மசோதா குறித்த வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இந்த மசோதாவிற்று ஆதரவாக 261வாக்குகளும் எதிராக 137 வாக்குகளும் கிடைத்தன.
அதிமுக எம்.பிக்கள் அனைவரும் பொடோவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. மற்றொரு கூட்டணிக் கட்சியானதிரிணாமூல் காங்கிரசோ இந்த வாக்கெடுப்பிலேயே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பொடோ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால்நாளைதான் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள்தான் அதிகம் என்பதால், ராஜ்யசபாவில்பொடோ நிச்சயம் நிறைவேறாது என்றே தெரிகிறது.
அப்படி ராஜ்யசபாவில் பொடோ சட்டம் நிறைவேறாத பட்சத்தில், நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தையும் வரும் 26ம் தேதி கூட்டி இம்மசோதாவை நிறைவேற்ற பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications