உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் வி.எச்.பி. தலைவர்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி:

அயோத்தியில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வி.எச்.பி. தலைவரான அசோக் சிங்கால் நேற்று(திங்கள்கிழமை) இரவு அதைக் கைவிட்டார்.

அயோத்திக்கு வரும் கரசேவகர்களை தடுக்கக் கூடாது, அங்கிருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்,வெளியூர்களிலிருந்து வரும் பஸ்-ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளைவலியுறுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 12.45 மணி முதல் சிங்கால் உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து நேற்றும் உண்ணாவிரதத்தை சிங்கால் தொடர்ந்ததையடுத்து, அவருடைய உடல் நிலை சற்றுமோசமாகியது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல வியாதிகளால் ஏற்கனவே அவதிப்படும் அவர்உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்தெரிவித்தனர்.

இதற்கிடையே அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் தீவிரமுயற்சிகளை எடுத்தன. இதைத் தொடர்ந்து நேற்றிரவு 9.30 மணிக்கு சிங்கால் தன்னுடைய உண்ணாவிரதத்தைவாபஸ் பெற்றுக் கொண்டார்.

மத்திய அரசு தன்னுடைய கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்ற உத்தரவிட்டதையடுத்து தான்உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+