காஷ்மீரில் குண்டு வெடித்து 2 பள்ளி மாணவர்கள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பள்ளி சிறுவர்கள் பலியாகினர்.மேலும் ஒரு சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள டேகிபோராவில் உள்ள லோலாப் என்ற பகுதியில் உள்ள முக்கியசாலையில் தீவிரவாதிகள் வெடிகுண்டை புதைத்து வைத்தனர்.
இந்த வெடிகுண்டை அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை கொல்வதற்காகவைக்கப்பட்டதாக போலீசார் கருதுகின்றனர். வெடிகுண்டை சரியாக காலை 9.40 மணிக்கு வெடிக்குமாறுதீவிரவாதிகள் செட் செய்துள்ளனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சாலையில் பள்ளி சிறுவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டுவெடித்தது. இதில் ரியாஸ் அகமது மீர் (10), ஹிலால் அகமது தர் (11) ஆகிய இரண்டு சிறுவர்களும் அதே இடத்தில்இறந்தனர்.
மேலும் சிறுமி மீமா (5), தாரிக் கான் (13), அகமது (14), ஷபீர் அகமது (14), அல்டாப் அகமது (15) ஆகியோருக்குபலத்த காயம ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் மீமாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வெடிவிபத்தில் ராணுவத்தினர் யாருக்கும் காயம்ஏற்படவில்லை. உடனடியாக வெடிகுண்டை வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதற்கா ராணுவத்தினர் அந்த பகுதிமுழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை எந்ததீவிரவாத அமைப்பும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications