பழமுதிர்சோலை ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே பழமுதிர்சோலையில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம்நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் ரூ.45 லட்சம் செலவில் ராஜகோபுரம்கட்டப்பட்டுள்ளது.
இந்த ராஜகோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரை ராஜகோபுரத்தில் மதுரை ஆதீனம்ஊற்ற, கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பழமுதிர்சோலையில் வந்துகுவிந்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி பழமுதிர்சோலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications