பாலன் கொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி.போலீஸார் நேற்று (புதன்கிழமை) கைது செய்தனர்.
சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த பாலன் சில மாதங்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்டார்.அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு தாம்பரம் அருகே எருக்கஞ்சேரி என்ற இடத்தில் பாலன் எரித்துக்கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகனை போலீஸார்கைது செய்தனர்.
இந்நிலையில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எருக்கஞ்சேரி இருதயராஜ், புளியந்தோப்பு சங்கர்ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் இருதயராஜ், பாலனை எரித்துக் கொள்ள உடந்தையாகஇருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யபட்ட இருவரும் புதன்கிழமை இரவு சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்செய்யப்பட்டன். பின்னர் இருவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், தனது தந்தை கொல்லப்படவில்லை, அவர் உயிருடன் தான் இருக்கிறார், நிச்சயம் ஒரு நாள் திரும்பிவருவார், போலீஸார் கூறுவது கட்டுக்கதை என்று பாலனின் மகன் மணிமாறன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications