சென்னையில் விபசாரம் நடத்திய "செக்ஸ்" நர்ஸ் கைது
சென்னை:
சிகிச்சைக்கு வருகிறவர்களை மயக்கி பங்களாவுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட நர்ஸ் உள்பட 6அழகிகளை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நர்சாக வேலை பார்ப்பவர் நளினி (45). இவருக்குசேத்துப்பட்டு கிளப் ரோட்டில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவில் 5 அறைகள் உள்ளன.
இந்த பங்களாவில் அழகிகளை வைத்து நளினி விபச்சாரம் செய்து வந்தார். தான் வேலை பார்க்கும்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் நைசாக பேசி நடிகையாக்குகிறேன், பணம் சம்பாதிக்கஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அவளுடைய பங்களாவுக்கு அவர்களை வர வைப்பார்.
அதன் பிறகு அவர்களை நைசாக பேசி விபச்சாரத்தில் ஈடுபட வைப்பாள். சிகிச்சைக்கு வரும் பணக்காரநோயாளிகளிடம் ஆசையை தூண்டும் வகையில் பேசி, இன்பம் அனுபவிக்க வேண்டும் என்றால் என்பங்களாவுக்கு வாருங்கள் என்று கூறி விசிட்டிங் கார்டு கொடுப்பாள்.
விபச்சாரத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்காக இவளிடம் 2 சொகுசு கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிளும் உண்டு. மேலும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வசதியாக 3 செல்போன்களும்வைத்திருந்தாள். மேலும் அரிகிருஷ்ணன் (20), கோவிந்தராஜ் (25) என்ற இரண்டு அடியாட்களையும்வைத்திருந்தாள்.
இந்த பங்களா குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் விபச்சார தடுப்பு போலீசார் இந்த பங்களாவைதிடீரென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அல்போன்சா (40), விஜயலட்சுமி (23), அனிதா (22), சுசி (28),தமிழ்அரசி (20) ஆகிய 5 அழகிகளையும் நளினையையும் போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த திருநாவுக்கரசு (25), சுரேஷ் (23), குமார் (50), கிப்டன் (31),ரமேஷ் (35), பன்னீர்செல்வம் (50) மற்றும் இரண்டு அடியாட்களையும் போலீசார் கைது செய்தனர்.
நளினியிடம் இருந்த வாகனங்கள், செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications