கஞ்சா கடத்திய ஜெயில் வார்டனுக்கு நீதிபதி காட்டிய கருணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொப்பிக்குள் மறைத்து கஞ்சா கடத்திய சிறை வார்டனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை, அவரதுவேலையைக் கருத்தில் கொண்டு, 51 நாட்களாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் வார்டனாக இருப்பவர் சுந்தரராஜ். கடந்த 1998ம் ஆண்டு இவர் சிறைக்குள்சென்றபோது தனது தொப்பிக்குள் கஞ்சாவை வைத்து கடத்திச் சென்றதை பிற வார்டர்கள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

போதைத் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் இறுதியில் சுந்தரராஜுக்கு 6 மாதசிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுந்தரராஜ் அப்பீல் செய்தார். அப்பீல் மனு நீதிபதி கற்பக விநாயகம்முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், சுந்தரராஜுக்கு கீழ்க் கோர்ட் கொடுத்த தண்டனை சரியானதுதான்.இருப்பினும், அந்த தண்டனையை அவர் அனுபவித்தால் தனது வேலையை அவர் இழக்க நேரிடும்.

இதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அவர் சிறையில் இருந்த 51 நாட்களே போதுமானது என்று இந்த நீதிமன்றம்கருதி, 6 மாத சிறைத்தண்டனையை ரத்து செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+