குன்றக்குடி கோவிலில் கொள்ளை முயற்சி: ஆசிரியர் உள்பட 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
குன்றக்குடி:
குன்றக்குடியில் உள்ள முருகன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற பள்ளி ஆசிரியர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
காரைக்குடி மாவட்டம் குன்றக்குடியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் அருகே கடந்த சில நாட்களாக ஒருவன்சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தான்.
இதையடுத்து போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் ஒரு தீவிரவாதி என்பது தெரியவந்தது.
அவனை மேலும் விசாரித்ததில் அவனும் இன்னும் சிலரும் சேர்ந்து முருகன் கோவிலில் கொள்ளையடிக்கத்திட்டமிட்டதும் தெரிய வந்தது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் ஒரு பள்ளி ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உட்பட பல பயங்கரமான ஆயுதங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முருகன் கோவிலைக் கொள்ளையடிக்க நடந்த முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications