பொன்முடி மாமியாரிடம் ரூ.1 கோடி மதிப்பு நிலம்: ஆவணங்கள் சிக்கின
விழுப்புரம்:
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மாமியாருக்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள 60ஏக்கர் நிலம் இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், சமயநல்லூர் செல்வராஜ்உட்பட பல திமுக பிரமுகர்களின் வீடுகளில் 4 நாட்கள் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் பொன்முடி வீட்டில் மட்டும் பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி அவைகளைவிழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவருடைய வீட்டில் மட்டுமில்லாமல் அவருடைய மாமனார் வீட்டிலும்போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாகல் என்ற ஊரில் 60 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலம் ரூ.1 கோடி மதிப்புள்ளது என்று போலீசார் கூறுகின்றனர். இது தவிர மேலும் பலமுக்கிய ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களையும் போலீசார் புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டு, பிறகுநீதிமன்றத்தில் பதிவு செய்து பிறகு விசாரணைக்காக திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலம் தொடர்பாக பொன்முடியின் மாமியார் சரஸ்வதியிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications