தாயகம் திரும்ப தயாராகும் இலங்கை அகதிகள்
அருப்புக்கோட்டை:
இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதையடுத்து அங்கிருந்துதமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள தமிழர்கள் மீண்டும் தங்களது தாயகம் திரும்ப விரும்புவதாக செய்திகள்வெளியாகி வருகின்றன.
இதையடுத்து தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கும் அகதிகளிடம்,குடியேற்றத்துறை அதிகாரிகள் பேசுகையில்,
இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் அதற்காக அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பிக்கலாம்.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதை அதில் தெரிவிக்கவேண்டும் என்று கூறினர்.
இருப்பினும் மிகப் பெரிய அகதிகள் முகாமான மண்டபம் முகாமில் மீண்டும் தாயகத்திற்கு அகதிகளைஅனுப்புவதற்கான பணிகள் எதுவும் தொடங்கியுள்ளதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications