கருணாநிதி மகன் கடையில் கத்தி முனையில் ரூ.4 ஆயிரம் கொள்ளை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க. தமிழரசுவின் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4,000பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை-ராயப்பேட்டையில் ஒரு துணிக் கடையையும் அதன் அருகில் டெலிபோன் பூத்துடன் கூடிய ஐஸ்கிரீம்பார்லரையும் தமிழரசு நடத்தி வருகிறார்.
கடந்த புதன்கிழமை இரவு அங்கு வந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரண்டு இளைஞர்கள், பில் பணத்தைத் தர மறுத்தனர்.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில், கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த நவீன்குமாரை அந்த இளைஞர்கள்கத்தியைக் காட்டி மிரட்டினர்.
அதன் பின்னர் அந்த இளைஞர்கள் நவீன்குமாரை மிரட்டி, கடையிலிருந்த ரூ.4,000 பணத்தை எடுத்துக் கொண்டுஓடிவிட்டனர்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நவீன்குமார் புகார் கொடுத்தார். போலீசார் இச்சம்பவம் குறித்துவழக்குப் பதிவு செய்து, அந்த இரண்டு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications