தமிழகத்திலிருந்த 18 பாகிஸ்தானியர்கள் திடீர் மாயம்
சென்னை:
விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருந்த 18 பாகிஸ்தானியர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியாமுழுவதும் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.இவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் மட்டும் 120 பாகிஸ்தானியர்கள் இருப்பது தெரிய வந்தது.
இவர்களில் 97 பேர் விசா காலம் முடிந்தும் பாகிஸ்தான் செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளனர். இவர்களில் சிலர்விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தங்கியிருந்த 18 பாகிஸ்தானியர்கள் திடீரென்று மாயமாகி விட்டனர். காணாமல்போயிருக்கும் இவர்கள் ஏதேனும் சதி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக காணாமல் போயிருப்பார்களா என்றுபோலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 18 பாகிஸ்தானியர்களையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications