சென்னை போலீஸ் குடியிருப்பில் மீண்டும் கொள்ளை
சென்னை:
சென்னையில் போலீஸ் குடியிருப்பில் மீண்டும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்தான் சென்னைகொண்டித் தோப்பு பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தண்டையார் பேட்டையில் உள்ள போலீஸ் அலுவலர்கள்குடியிருப்பில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
தண்டையார் பேட்டையில் உள்ள போலீஸ் அலுவலர்கள் குடியிருப்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையர்கள்புகுந்து 13 வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைகொள்ளையடித்துள்ளனர்.
இதில் ஒரு வீட்டில் மட்டும் 80 சவரன் நகையும், ரூ.60,000 ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட போலீசார் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில்நடக்கும் 2வது கொள்ளை சம்பவம் இது என்பதால், சென்னை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications