நீதிபதி அசோக்குமார் கெட்ட வார்த்தையால் திட்டியதாக நடிகர் மன்சூர் அலிகான் மனு
சென்னை:
தன்னை தகாத வார்த்தையால் திட்டிய முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிநடிகர் மன்சூர் அலிகான், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மன்சூர் அலிகான் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்நேகா என்ற பெண்ணை கற்பழித்ததாக என் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி அசோக்குமார் எனக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
இதைத் தொடர்ந்து நான் சிறையில் அடைக்கப்பட்டேன். பின்னர் எனக்கு முதல் வகுப்பு சிறை வழங்கக் கோரிமனுத்தாக்கல் செய்தேன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார் என்னை தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் என் போன்றஆட்களுக்காக ஏன் ஆஜராகிறீர்கள் என்று என் வக்கீலிடம் கேட்டுள்ளார்.
இது குறித்து நான் மனித உரிமை கமிஷனில் புகார் கூறினேன். ஆனால் நீதிபதி மீதான புகார் என்பதால், உயர்நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி அந்தப் புகார் நிராகரிக்கப்பட்டது.
எனவே என்னை தகாத வார்த்தைகளால் திட்டிய நீதிபதி அசோக்குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அந்த மனுவில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications