மதுரை: பெண்ணைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பெண்ணைக் கொலை செய்தவருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்ற முத்துச்சாமி. இவர் வீரராகவன் என்பவன் மகளைகழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அவரது நகைகளை எடுத்துக் கொண்டார்.
இதை வீரராகவன் பார்த்து விட்டதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகன்கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மதுரை 4-வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில்முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications