ஈஸ்டர் திருநாள்: ஜெ. வாழ்த்து
சென்னை:
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை)வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்த தினமான புனித வெள்ளி நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து வரும்ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் உலகெங்கிலும் உள்ளகிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
புனித இயேசுபிரான் மனிதனாகத் தோன்றி மக்களிடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் போதித்தார்.
கொடியவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த நாள்தான் புனித வெள்ளி என்று உலகெங்கும வாழும்கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அவர் மீ"ண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் திருநாளாகக்கொண்டாடப்படுகிறது.
ஏமாற்றக்காரர்களாலும், சதிகாரர்களாலும், சூழ்ச்சிக்காரர்களாலும் மக்கள் பட்ட துன்பங்களை எல்லாம் போக்கிஅவர்களைப் பாவத்திலிருந்து விடுவித்து மக்களின் பாவங்களை, தானே ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நல்வழிகாட்டுவதே இயேசு பெருமானின் பெருவாழ்வாக இருந்தது.
நம் இந்தியத் திருநாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து, நாட்டில் அமைதியின்மை நிலவி வரும் இந்த வேளையில்தமிழக மக்கள் அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்து அனைவரும் சகோதரர்கள் என்ற சமுதாய ஒற்றுமைக்குவழிகோல வேண்டும் என்பதே என்னுடைய ஈஸ்டர் செய்தியாகும்.
ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் எனதருமைப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்தவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications