13 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
நாகர்கோவில்:
திருமணம் செய்வதாக கூறி 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியைக் கற்பழித்து, கர்ப்பிணியாக்கியஇளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ஷாலினி (13). இவர் 7ம் வகுப்புபடித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் ராஜன் (17) ஒரு கட்டிட தொழிலாளியாகஉள்ளார்.
ஷாலினி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம், ராஜன் இவரை பின் தொடர்ந்து செல்வார். இருவரும் அடிக்கடிசந்தித்துக் கொண்டதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.
நீ இல்லாமல் நான் இல்லை, உன்னையே திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி ஆசை வார்த்தைகூறியுள்ளார் ராஜன். இதை நம்பிய ஷாலினி அவனது ஆசைகளுக்கு இடம் கொடுத்து வந்தாள். இதனால்இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனால் தான் கர்ப்பிணியாக இருப்பது தெரியாமலேயே ஷாலினி 5 மாத கர்ப்பிணியானாள். கருக்கலைப்புசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள். இந்த செய்தியை அறிந்த ராஜன் தலைமறைவானான்.
இது குறித்து ஷாலினி குலசேகரம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் ராஜனை தேடிப்பிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
13 வயது சிறுமி கர்ப்பிணியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications