வேலூர் சிறையில் குவைத் பெண் திடீர் உண்ணாவிரதம்
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவைத் நாட்டைச் சேர்ந்த பலாக் அல் ஆஸ்மி, தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று (வியாழக்கிழமை) திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த காதர் பாட்ஷா (25) என்ற தன் காதலருடன் போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த சென்னைவந்து சேர்ந்த ஆஸ்மி (22), விமான நிலையப் போலீசாரிடம் பிடிபட்டார்.
பின்னர் ஆஸ்மி விடுவிக்கப்பட்டாலும், போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒழுங்காகக் கையெழுத்துப் போடாததால்,அவரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் ஆஸ்மிஅடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரியும், தன் காதலருடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு கோரியும்ஆஸ்மி இன்று திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.
இன்று காலையிலிருந்தே சிறை அதிகாரிகள் கொடுத்த உணவைச் சாப்பிட மறுத்து வருகிறார் ஆஸ்மி.
ஆஸ்மி தொடர்ந்து அராபிய மொழியிலேயே பேசி வருவதால், சிறை அதிகாரிகள் அவரைச் சமாளிக்க மிகவும்திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications