மலிவு விலை மதுவால் அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்
சென்னை:
மலிவு விலை மதுவால் 2 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று நிதித்துறைசெயலாளர் ஆர்.சந்தானம் கூறியுள்ளார்.
புதன்கிழமை சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்தார். பட்ஜெட்உரையின்போது மலிவு விலை மதுவால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மலிவு விலை மது வரும் வரும் தமிழ் புத்தாண்டுமுதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:
மலிவு விலை மதுவால் அரசுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பார் வசதிக்காக லைசென்சு கட்டணம் மூலம் ரூ.50 கோடி கிடைக்கும்.
நிதி நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் முழு அளவிளான ஒரு கட்ட உதவித்திட்டம் வகுக்க வேண்டும் என்றுநமது முதல்வர், பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி மானியமாககிடைக்கும்.
அரிசி, கோதுமை மீது விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளது, திரும்பப் பெறப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று சந்தானம் கூறினார்.












Click it and Unblock the Notifications