ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குத்திக் கொலை: கோவையில் பதற்றம் - போலீசார் குவிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்துகோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் என்பவர் இன்று (வியாழக்கிழமை) காலை கத்தியால்குத்திக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
கோயம்புத்தூர்-புதூர் தெற்கு தாலுகா ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரச் செயலாளர் முருகேசன் (35). இன்று காலைதன்னுடைய ஜெராக்ஸ் கடையைத் திறப்பதற்காக அவர் வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகேசனை வழிமறித்த ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல், அவரைப் பயங்கரமாகத் தாக்கியது. பின்னர்அவரைக் கத்தியால் சராமாரியாகக் குத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடி விட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசன் உடனடியாக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தப் படுகொலையை அடுத்து கோயம்புத்தூரின் பல பகுதிகளிலும் கடும் பதற்றம் நிலவியது.கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணித்தொண்டர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூரின் பல பகுதிகளில் இன்று கடையடைப்பும் நடந்தது.
கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த சுல்தான் மீரான் என்ற முஸ்லீம் பிரமுகர் நேற்றுதான் கொலைசெய்யப்பட்டார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் அவரைக் கொலை செய்ததாகக்கூறப்படுகிறது.
இந்தக் கொலையைத் தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டிருப்பதால்கோயம்புத்தூரில் பெரும் பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications