காவலருக்கு அறை விட்ட பெண் போலீஸ் அதிகாரி: மதுரை போலீசார் கொந்தளிப்பு
சென்னை:
சல்யூட் அடிக்காத காரணத்தால், ஆயுதப் படை போலீசாரை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மண்டல காவல்துறை காவலர்கள் சங்கத்தலைவர் ஒச்சாத் தேவர் கூறியுள்ளார்.
மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் வன்னியன். கடந்த திங்கள்கிழமை இவர் பணியில்இருந்தபோது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜினா அங்கு வந்தார்.
யூனிபார்மில் இல்லாமல் சாதாரண உடையில் ரெஜினா வந்ததால் அவரை முதலில் வன்னியனுக்கு அடையாளம்தெரியவில்லை. இதனால் அவர் சல்யூட் அடிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ரெஜினா, வன்னியனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதைப் பார்த்து போலீஸ்நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அறை வாங்கிய வன்னியன் கோபமடைந்து ரெஜினாவுடன் வாக்குவாதம் செய்தார். அவரும் பதிலுக்கு பேசவேநிலைமை மோசமானது. தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து இருவரையும்சமாதானப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் மதுரை மாநகர போலீசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் மத்தியில் ஒருபோலீசைக் கன்னத்தில் அறைந்தது பொறுத்துக் கொள்ள முடியாத செயல் என்று தென் மண்டல காவல்துறைகாவலர்கள் சங்கத் தலைவர் ஒச்சாத் தேவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரெஜினா மிகவும் திமிர்த்தனமாக நடந்து கொண்டுள்ளார். இவரது செயல் குறித்து மாநில டிஜிபி, முதல்வர்ஜெயலலிதா, உள்துறை செயலாளர், தென் மண்டல ஐ.ஜி. மற்றும் பலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பெரியகுளம் எம்.பி. தினகரனிடம் இதுகுறித்து புகார் செய்யவுள்ளோம். அவர் மூலம் தமிழக முதல்வர்ஜெயலலிதாவையும் பார்த்து புகார் கொடுப்போம் என்று ஒச்சாத் தேவர் அக்குறிப்பில் கூறியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஒச்சாத் தேவர் தலைமையில் இந்தச்சங்கத்தைச் சேர்ந்த பல காவலர்கள் ரகசியமாக ஒரு கல்யாண மண்டபத்தில் சந்தித்து விவாதித்தனர்.
தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் கூட இதில் ஏராளமானஅளவில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, வன்னியனை அறைந்த விவகாரம் தொடர்பாக ரெஜினா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமதுரை மாநகர போலீஸ் உயரதிகாகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications