கோவையில் நாளை பந்த்: இந்து முன்னணி அழைப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் நேற்று (வியாழக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்துமுன்னணி அமைப்பினர் நாளை அங்கு முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர்-புதூர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரச் செயலாளரான முருகேசன் நேற்று காலை ஆறு பேர் கொண்ட ஒருகும்பலால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த புதன்கிழமைதான் முஸ்லீம் பிரமுகரான சுல்தான் மீரான் என்பவர் கொலை செய்யப்பட்டதால், முருகேசன்கொலைச் சம்பவத்தையடுத்து கோயம்புத்தூரில் பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் கொஞ்சம்தணிந்தது.
இதற்கிடையே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கான பேரைக் கைது செய்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடு வீடாகச் சென்று போலீசார் கொலையாளிகள் பற்றி விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில் முருகேசன் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து நாளை கோயம்புத்தூரில் முழு வேலை நிறுத்தத்திற்குஇந்து முன்னணி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூரில் இதை இன்று தெரிவித்த இந்து முன்னணியின் மாநில அமைப்பாளரான முருகானந்தம், ஆனால்அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு இந்த வேலைநிறுத்தத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக்கூறினார்.
பஸ்கள், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடும் என்றும் முருகானந்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications