Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ.யிடம் மனு கொடுக்க வந்தவர் மயக்கம் - கோட்டையில் மீண்டும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்காக பெங்களூரில் இருந்து வந்த நபர் தலைமைச்செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மயக்கம் போட்டு விழுந்ததால், அங்கு மீண்டும் பெரும் பரபரப்புநிலவியது.

ஜெயலலிதாவைப் பார்த்து மனு கொடுப்பதற்காக இரண்டு நாட்கள் காத்திருந்து, அது முடியாமல் போகவே கடந்தபுதன்கிழமை கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு-நளினி தம்பதியர் தலைமைச் செயலகத்தில் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டனர்.

அதேபோல் நேற்றும் கோட்டைக்கு வந்த சேலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஜெயலலிதாவின் காரின் முன்னால்பாதுகாப்புக்காகச் சென்று கொண்டிருந்த காரின் முன் விழுந்து, அதன் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தைக்கவர்ந்து மனு கொடுக்க முயற்சித்தார்.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சிவசங்கரன் என்ற நபர் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். இவர்ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுப்பதற்காகக் காத்திருந்தார்.

பின்னர் இன்று பிற்பகல் ஜெயலலிதாவின் தனியறையை நோக்கி மனுவுடன் சென்று கொண்டிருந்த சிவசங்கரன்திடீரென்று சுருண்டு விழுந்து மயங்கினார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிவசங்கரனை அள்ளிக் கொண்டுபோய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிவசங்கரன் இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடவில்லை என்று கூறினர்.தற்போது அவருடைய உடல் நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

அடுத்தடுத்து மூன்று நாட்களில் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட கதியால்கோட்டையே வெலவெலத்துப் போயுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+