சென்னையில் பாஜக அலுவலகம் அதிமுகவினரால் சூறை
சென்னை:
சென்னையில் உள்ள பாஜகவின் அலுவலகம் அதிமுகவினரால் அடித்து சூறையாடப்பட்டது.
பாஜகவிலிருந்து சமீபத்தில் பிரிந்து சென்ற சுந்தரம் என்பவர் அதிமுகவில் சேர்ந்தார்.
நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு சுந்தரம் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிமுகவினர் மத்திய சென்னைமாவட்ட பாஜக அலுவலகத்தில் புகுந்தனர்.
அந்த அலுவலகத்தின் கதவை உடைத்துத் திறந்த அந்தக் கும்பல், அங்கிருந்த கண்ணாடி ஜன்னல், மேஜைஉள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கியது. அங்கிருந்த கொடிகள், புகைப்படங்கள்ஆகியவையும் இவர்களுடைய தாக்குதலிலிருந்து தப்பவில்லை.
பின்னர் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்களை அள்ளிக் கொண்டு ஓடிவிட்டதாகக்கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏவான ராஜா, தமிழக அரசிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications