குஜராத்தில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கோமதிப்பூர் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு பயங்கரவன்முறை வெடித்தது.
இந்தப் பகுதிக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்தது. கல்வீச்சில் ஈடுபட்ட அந்தக் கும்பல் போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியது. ஒருவர் கத்தியால்குத்திக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வன்முறைக் கும்பலைக் கலைக்க முயற்சித்தனர். அதுபலனளிக்காமல் போகவே அந்தக் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் இரண்டு பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்த பிறகு அங்கு அமைதி நிலவியது.












Click it and Unblock the Notifications