27ம் தேதி வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி நடக்கிறது.
சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையையடுத்த அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கள்ளழகர் வரும்வழியெல்லாம் பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.
108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான அழகர்கோவிலையும், வைகை நதியையும், மீனாட்சி அம்மன்ஆலயத்தையும் மையமாக வைத்து நடக்கும் இந்த நிகழ்ச்சி இந்தியாவில் நடக்கும் மிகப் பெரிய திருவிழாக்களில்ஒன்று.
இந்த விழா இம் மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. 25ம் தேதி அழகர் கோவிலில் இருந்து சுந்தர்ராஜபெருமான்தங்கப் பல்லக்கில் புறப்படுவார். 27ம் தேதி மதுரையை அடைந்து அன்று காலையே வைகை ஆற்றில் இறங்குவார்.












Click it and Unblock the Notifications