குஜராத் செல்கிறார் வாஜ்பாய்: பாதுகாப்பு தீவிரம்
அகமதாபாத்:
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் குஜராத் இன்று (வியாழக்கிழமை)குஜராத் செல்கிறார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குஜராத்தில் நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுதிணறிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசும் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வாஜ்பாய் இன்று குஜராத் செல்லவுள்ளார். காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில்தங்கியுள்ள மக்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கிடையே வாஜ்பாயின் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சில வன்முறைகளும் இன்னும்தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.












Click it and Unblock the Notifications